Sunday, 24 January 2016

வீட்டு மனை (பூமி) தலம் தேர்ந்தெடுப்பது எவ்வாறு?

                     இன்றைய சமுதாயத்தில் நாகரீக வளர்ச்சி வேகத்தில் ஜன நெருக்கடியில் பலவிதங்களில் வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. நாம் அவ்விதம் வீடு கட்டுவதற்குடைய மனையை தேர்நதெடுப்பது எவ்வாறு என்று குறிப்பிட்டுள்ளேன். 90% சரியான மனையையே தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையெனில் கிடைத்த மனையை சதுரமாகவோ, அல்லது செவ்வகமாகவோ மாற்ற முயற்சிக்க வேண்டும்.

                     இதைப் போன்று பலதரப்பட்ட வடிவம் உடைய அனைத்தும் தவறான மனைகளே ஆகும். இவை அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டிய மனைகள்.

                    வாங்கக் கூடிய மனைகள்:

                    1. சதுர மனை : நான்கு புறமும் சரியாக அமைந்த சதுரமனை, மூலைகளிலும் 90° சரியாக இருக்க வேண்டும்.

                    2. நீர் சதுரமனை : இரண்டுபுறம் ஒர் அளவும் மற்ற இரண்டுபுறம்
சமமாக அமைந்த நீண்ட அமைப்புடைய மனை நான்கு மூலைகளிலும் 90° சரியாக இருக்க வேண்டும் அகலத்தை விட நீளப்பகுதி இரண்டு மடங்கு மேல் இருக்ககூடாது.

                    3. வடக்கு வளர்ந்த மனை : மனையின் வடக்குப்பகுதி வடக்கு நோக்கி வளர்ந்துருக்கும் வடமேற்கு பகுதியில் above 90° இருக்கும்.

                    4. கிழக்கு வளர்ந்த மனை : கிழக்குப் பகுதி கிழக்கு நோக்கி சற்று
வளந்திருக்கும் தென்கிழக்குப்பகுதி above 90° இருக்கும்.

                    5. வடமேற்கு வளர்ந்த மனை : மனையின் வட மேற்க்குப் பகுதி
மேற்கு நோக்கி வளர்ந்த அமைப்புடைய மனை தென் மேற்குப்பகுதி above 90° இருக்கும். வாஸ்து அமைப்பை சரிசெய்து வீடு கட்டுக் கொள்ள வேண்டியமனை.

                    6. தென்கிழக்கு வளர்ந்த மனை : மனையின் தென்கிழக்குப் பகுதி
தெற்கு புறத்தில் வளர்ந்திருக்கும் அமைப்பு உடைய மனை தென்மேற்கு பகுதி above 90° இருக்கும் வாஸ்து அமைப்பை சரிசெய்து வீடு கட்டிக் கொள்ள வேண்டும்.

                    7. வடகிழக்கில் கிழக்கு வளர்ந்த மனை : மனையின் வடகிழக்கும்
பகுதியைப் பாருங்கள் ஒர் Box போன்ற அமைப்பு நீட்டிக் கொண்டிருக்கின்றது. சரிசெய்து வீடுகட்டிக் கொள்ள வேண்டியமனை.

                    8. வடகிழக்கும் வடக்கு வளர்ந்தமனை : வடகிழக்குப் பகுதியில்
வடக்கு வளர்ந்த மனை வாஸ்து சரிசெய்து வீடுகட்டப்பட வேண்டியமனை.

                    9. வடமேற்கு வளர்ந்தமனை : வடமேற்குப் பகுதியில் மேற்குப்புறம்
வளர்ந்த மனை. வாஸ்து சரிசெய்து வீடுகட்டப்பட வேண்டிய மனை.

                    10. தென்கிழக்கு வளந்த மனை : தென்கிழக்குப் பகுதியில் தெற்குப்பகுதி அதிகமாக வளர்ந்த மனை வாஸ்து சரிசெய்து வீடு கட்டப்பட்ட வேண்டிய மனை.

Saturday, 23 January 2016

வாஸ்து புருஷன்


                    “வாஸ்து புருஷன்” என்பவர் பிரம்மனால் படைக்கப்பட்ட ஒரு அசுரன். அவன் தேவர்களுக்குத் தொல்லை கொடுக்க அதனால், பிரம்மனுக்கும், அவனுக்கும் யுத்த நடந்தது. அந்த யுத்தத்தில் அசுரன் தேவர்களால் வெல்லப்பட்டு பூமியில் தள்ளபட்டான். அவன் மனம் திருந்தி பிரம்மனை வேண்டினான். அதனால் பிரம்மன் அவனுக்கு அருள் புரிந்து “வாஸ்து புருஷன்” என்று பெயரிட்டு, உலகில் கட்டப்படும் கட்டிடங்கள் அனைத்திலும் முதலில் வாஸ்து புருஷனுக்குப் பூஜை செய்து விட்டுத்தான் ஆரம்பிக்க வேண்டும் என்றும், அவன் சஞ்சரிக்கும் இடம் “வாஸ்து மண்டலம்” என்று பெயர் பெறும் என்றும் பிரம்மனால் ஆசி வழங்கப்பட்டது என்பது ஐதீமாகும்.

                    பொதுவாக எந்த நாட்டவராக இருந்தாலும் கட்டிடம் கட்ட ஆரம்பிக்கும் போது அவரவர் வழக்கப்படி பூஜை செய்த பின்னரே, ஆரம்பம் செய்து உலக வழக்கமாக உள்ளது. அவ்வாறு பூஜை செய்யும் போது “வாஸ்து புருஷன்” விழித்திருக்கவேண்டும் என்பது ஐதீகம். இது பற்றிய பல கருத்துக்கள் பலதரப்பட்ட விதத்தில் நிலவுவதால் ஒரு சில குறிப்பிட்ட விவரங்களை மட்டும் நான் இங்கு உங்களுக்குத் தந்திருக்கின்றேன்.

                      நாம் கட்டிடம் கட்டும் இடத்தை மொத்த “64” பாகங்களாகப் பிரிக்கவேண்டும் அதில் படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்று வாஸ்து புருஷனின் உருவம் அமையப் பெறுகின்றது. பல தரப்பட்ட கருத்துக்கள் நிலவுவதால் படத்தை எளிமைப்படுத்தி உங்களுக்கு விளக்கம் தந்துள்ளேன்.
                     படத்தில் வாஸ்துபுருஷனின் உருவம் உள்ளது. இதில் அவரது தலை பகுதி வடகிழக்குப் பக்கத்திலும் வயிற்றுப்பகுதி மத்திய பக்கத்திலும் வலது கை வடமேற்கிலும், இடது கை தென்கிழக்கிலும், கைகளின் மணிக்கட்டுகள் முதுகுக்குப் பின்னால் பிரம்மஸ்தானத்திலும் கால்கள் இரண்டும் தென் மேற்கிலும் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

                     இந்த படத்தில் 1,2,3,4, ஆகிய நான்கு பகுதிகளும் பிரம்மஸ்தானம் ஆகும். மொத்தமுள்ள 64 பகுதிகளிலும் மத்தியில் உள்ள நான்கு பகுதியே பிரம்மஸ்தானம் ஆகும். இந்த பகுதியில் நாம் வீடு கட்டும் போது காலியாக விட்டுவிட்டு கட்ட வேண்டும். (அதாவது மத்திய ஹால் அங்கு வர வேண்டும் அல்லது எந்த தடுப்புச் சுவரும் இல்லத இடம் இருக்கவேண்டும்) என்று “வாஸ்து சாஸ்திரம்” சொல்கின்றது. இந்த இடத்திற்கு பிரம்ம தேவன் வந்து அருள்புரிவதாக வாஸ்து சாஸ்திரம் சொல்கின்றது.


                          வாஸ்து புருஷன் விழித்திருக்கும் வேளையில்தான் கட்டிடம் கட்ட பூஜை செய்யவேண்டும். வாஸ்து புருஷன் சில நாட்களில் தான் விழித்திருப்பதாகவும், சாப்பிட்டுபின் தாம்பூலம் தரிப்பதாகவும் அந்த வேளையில் பூஜை செய்வது நல்லது என்பது ஐதீகம்.

                          வாஸ்து புருஷன் விழித்திருப்பதாக சொல்லப்படுவது இரண்டு விதமான நிலவுகின்றது. வருடத்தில் நாட்களில் சித்திரை 10 ந் தேதி, ஆவனி மாதம் 6 ந் தேதி, ஐப்பசி மாதம் 11 ந் தேதி, கார்த்திகை மாதம் 8 ந் தேதி, தை மாதம் 12 ம் தேதி, மாசி மாதம் 22 ந் தேதி என்பது ஒரு சிலரின் கருத்து. வேறு சிலர் தினமும் விழித்திருப்பதாகச் சொல்கின்றனர். இரவு நடுநிசியில் இருந்து காலை 3 மணி வரையில் கிழக்கு நோக்கியும், காலை மணி 6 முதல் 9 மணி வரை மேற்கு நோக்கியும், 9 மணி முதல் 12 மணி வரை வடக்கு நோக்கியும் கடிகார முள் சுற்றும் திசையில் அசைந்து வருவதாகவும் பூஜை செய்து நிலை வைக்கும் போது வஸ்து புருஷன் அத்திசை நோக்கிய நேரத்தில் வைக்கவேண்டும் என்று மனையடி சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. வேறுசிலர் வருடத்திற்கு ஒரு முறை ஒரு சுற்றுபூர்த்தி அடைவதாக நம்புகின்றனர். இவ்வாறு பல தரப்பட்ட கருத்துக்கள் நிலவுவதால் சிறந்த முறையை நாம் பின்பற்றி நல்ல நேரத்தில் பூஜை ஆரம்பம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.

                          வாஸ்து புருஷனின் தலைப்பகுதி ஈசான்யத்தில் (வடகிழக்கு) அமைவதை கவனியுங்கள். எனவே தான் நாம் அப்பகுதிக்கு முக்கியத்துவம் தருகின்றோம். ஒரு மனிதனின் அனைத்து செயல்களுக்கும் பிறப்பிடம் மூலையில் இருந்து செய்லபடுவது போல் ஒர் மனையின் அனைத்து செயல்களும் வாஸ்து புருஷனின் தலை இருக்கும் ஈசான்ய பகுதியில் இருந்து தான் பெறப்படுகின்றது.

                           இந்த பூமியில் ஏற்படும் காந்த சக்தியின் சுழற்சி வடகிழக்கில் ஆரம்பித்து தென் மேற்கில் முடிவடைகின்றது. எனவே நாம் வடகிழக்கில் காலியிடம் நிறைய விடுவதன் மூலம் அந்த சக்தியை அதிகம் பெறவும் சூரியக் கதிர்களின் மூலம் அந்த நம்மிடத்தில் சேமித்து வைக்கவும் உதவுகின்றது. மேலும் தென் மேற்கில் உயரமான கட்டிடங்கள் கட்டிவதன் மூலம் வடகிழக்கில் சேமிக்கப்பட்ட சக்தி அனைத்து இடங்களுக்கும் பரவி கடைசியில் தென்மேற்கில் உறைவதற்கு ஏதுவாக அமைகின்றது. மேலும் வடகிழக்கில் கீழ் நிலை நீர்த்தொட்டி, கிணறு ஆழ்நிலை கிணறு இவைகளின் மூலம் மேலும் ஏதுவாக அமைகின்றது.

                           மனிதனின் தலை முதல் பாதம் வரை ரத்த ஒட்டம் எவ்வாறு நிகழ்கின்றதோ அவ்விதமே “வாஸ்து புருஷன்” எனப்படும் மாய உருவத்திலும் வடகிழக்கு எனும் தலை பகுதி முதல் தென் மேற்கு எனப்படும் கால் பகுதி வரை சக்திகளின் பரிமாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
எனவே வடகிழக்கில் அதில் இடம் விடுவதன் மூலம் “வாஸ்து புருஷனின்” சக்தியை நாம் அதிகப்படுத்தி, அதன் மூலம் நாம் பலவிதமான சக்திகளை பெற்று நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், சகல செல்வங்களுடனும் வாழ்வது உறுதி.

Friday, 22 January 2016

திருத்தலங்களில் வாஸ்து

                        “வாஸ்து சாஸ்திரத்தால் பணம் வருமா?” என்பது ஒர் முக்கியமான கேள்வியாக அனைவரிடத்திலும் இருந்து வருகின்றது. ஒர் மனிதனின் வாழ்கையில் பணம் என்பது ஒரு சிறிய பகுதியே. பணம் மட்டும் இருந்தால் நிம்மதி கிடைத்து விடாது. அது இல்லாலும் நிம்மதி கிடைக்காது.
எனவே வாஸ்து சாஸ்திரத்தால் பணம் வருமா என்று சிந்திப்பதை விட்டு விட்டு, வாஸ்து சாஸ்திரத்தின் படி நாம் வசிக்கும் அனைத்து இடங்களையும் அமைத்துக் கொள்வதால் பணத்துடன் அனைத்து சுகங்ளையும் நாம் அடைய முடியும் என்பதை உணர வேண்டும்.

                          எனது அனுபவத்தில் “வாஸ்து பலம்” இல்லாத இடத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த பலர் “வாஸ்து பலம்” வரும்படி மாற்றியமைத்த உடன் அனைத்து நலன்களும் பெற்று வாழ்ந்து கொண்டிருப்பதை கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

                          எனவே வாஸ்து சாஸ்திரத்தின்படி ஒருவர் வசிக்கும் இடம் அமையும் போது அவர் அனைத்து வசதிகளையும் அடைகின்றார் என்பது மறுக்க முடியாத ஆதாரபூர்வமான உண்மையாகும்.

Thursday, 21 January 2016

அஸ்ட திக்குகள் எட்டு - எட்டு திக்கு பாலகர்கள்

கிழக்கு :
                    சூரியன் உதிக்கும் திசை, பூமியானது இத்திசை நோக்கியே சுழல்கின்றது சூரியனின் ஆற்றீல் அறீந்த நமது முன்னோர்கள் இத்திசை ‘’சூரிய நமஷ்காரம்’’ செய்துந்தனர். இந்த திசை இந்திர பகவானுக்கு உரிய திசையாகும்.

மேற்கு :
                  சூரியன் மறையும் திசை, பூமி சுற்றும் திசைக்கு எதிர்ப்புறம், இந்த திசைக்கு உரிய பாலகர் வருண பகவான் ஆகும்

வடக்கு :
                 சூரியன் உதிக்கும் திசை நோக்கி நாம் இருக்கும்போது நமக்கு இடப்புறம் உள்ள திசையாகும். இந்த திசைக்கு உரிய பாலகர் குபேர ஆவார். வாஸ்து சாஸ்திரத்தில் இது மிக முக்கியமானது திசையாக கருதப்படுகின்றது.

தெற்கு :
                சூரியன் உதிக்கும் திசைக்கு வலது புறம் உள்ள திசை, இந்த திசைக்கு உரிய பாலகர் ‘’எமன்’’ ஆவார். வாஸ்து சாஸ்திரத்தில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றீ பல விவரங்கள் கூறபட்டடுள்ளது. இதுவும் மிக முக்கியமான திசையாகும்.

வடகிழக்கு :
               வடக்கும், கிழக்கும் சேரக்கூடிய திசை வடகிழக்கு திசையாகும். இது வாஸ்து சாஸ்திரத்தில் மிக இன்றீமையாத ஈசனுக்கு உரிய தெய்வ சக்தி உடையது. பாலகர், ஈசான்கள். இந்த திசை சரியாக ஒர் இல்லத்தில் அமைந்தால் அனைத்து நலன்களூம் குறைவில்லாமல் கிடைக்கும் குழந்தைகளூக்கு உள்ளபகுதி, தனவரவிற்கு உள்ள பகுதி.

தென்கிழக்கு :
               தெற்க்கும் கிழக்கும் சேரும் பகுதி – தென்கிழக்கு திசையாகும், அக்னிக்கும் உரியது பாலகர். அக்னிக்கு உரியது பாலகர். அக்னிபகவான் விட்டில் பெண்கள் நலம், வம்பு, வழக்கு, பூகழ், வரவுக்கு அதிகமான செலவு, பகைவரால் தொல்லை முதலியவைகள் இந்த பகுதி அமையும் விதத்தை பொருத்தே அமைகின்றது.

வடமேற்கு :
                வடக்கும் மேற்கும் சேரும் பகுதி வடமேற்கு வாயுப்பகுதி, பாலவர், வாயு பாகவான். ஒர் வீட்டில் உள்ள அமைப்பில் இந்த திசையை வைத்து பெண் ஆதிக்கம் உள்ளதா? இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்,
பெண்களின் நலன்! திருமண வாழ்க்கை, குணம், நடத்தை, குடும்பத்தின் ஒற்றுமை, செல்வத்தின் அமைப்பு, வழக்கு விவகாரங்கள், புகழ் அரசியல் செல்வாக்கு முதலியவை இந்த திசையை வைத்தே அமைகின்றது.

தென்மேற்க்கு :
                இதுவும் ஒர் முக்கியமான திசையாகும். தெற்கும் மேற்க்கும் சந்திக்கும் இடம் தென்மேற்க்கு என்று அழைக்கப்பகிறது. நைருதிக்கு உரியது இந்த மூலை. “நைருதிமூலை” என்று அழைக்கப்படுகிறது. ஈசனிய மூலைக்கு நேர் எதிர் மூலை இது. ஈசான்யம் ஜனனம் என்றால் இது மரணம். ஈசான்யம் வரவு என்றால் இது செலவு. எனவே ஈசான்யத்தைப் போல் இது முக்கியமான திசையாகும். “பொருளாதாரம், ஆண்களின் நடத்தை, அமைதி, வியாபார அமைப்பு, அந்த வீட்டில் ஆண்களின் நிலை, முதலியவை இந்த திசையின் அமைப்பைப் பொருத்தே அமைக்ககின்றது”. இது ‘’கன்னி மூலை’’ என்று அழைக்கப்படுகின்றது.

வாஸ்து சாஸ்திரம்

                      மனிதன் வசிக்கும் இப்பூமியானது கதிரவனின் ஒளிக்கதிர்களால் வலிமை பெறுகின்றது.  புவி படைப்புகள் அனைத்திற்கும் மூலம் சூரியன்”.  இந்த சூரியனை ஆதாரமாக வைத்து எழுதப்பட்ட சாஸ்திரமே “வாஸ்து சாஸ்திரம்”.

                      இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் சேர்க்கையிலேயே அனைத்தும் நடக்கின்றன! என்பதை யாராலும் மறுக்கமுடியாது. இந்த பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர் நெருப்பு, கொள்ளூம் அமைப்பே ”வாஸ்து சாஸ்திரம்’’.

                     ‘’சாஸ்திரம்’’ என்பது நம் முன்னோர்கள், அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட உள்ளத்தில் உருவான நல்ல கருத்துக்கள் மற்றவர்கள் பயன் பெறுவதற்காக அவைகளை சூத்திரங்களாக மாற்றி விதிகளை ஏற்படுத்தி நமக்கு கொடுத்துள்ளதேயாகும்.
      
                       எனவே நாம் இவைகளை புரிந்து கொண்டு, அனுபவமே சாஸ்திரமாகின்றது என்பதை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் ‘’வெற்றீ நிச்சயம்.’’